சுருள் போளி

8 comments
தேவையான பொருட்கள் :-
  • மைதா மாவு                     - அரை கிலோ
  • சோடா உப்பு                      - சிறிது
  • உப்பு                                    - தேவையான அளவு
  • பொட்டுகடலை                - 200 கிராம்
  • சர்க்கரை                            - 200 கிராம்
  • வறுத்த வெள்ளை எள்   - 50 கிராம்
  • ஏலக்காய்                          - 4
செய்முறை :-
  • சிறிது நீரில் உப்பையும் சோடா உப்பையும் கலந்து மைதாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
  • மிக்சியில் பொட்டு கடலையை போட்டு மாவாக திரித்து வைக்க வேண்டும்.
  • பொட்டு கடலை மாவுடன் சர்க்கரை,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வட்டமாக தேய்த்த மாவை போட்டு பூரிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
  • பூரி சூடாக இருக்கும் போதே அதன் நடுவில் பொட்டுகடலை மாவு கலவையை பரவலாக  வைத்து சுருட்டி வைக்க வேண்டும்.
  • சுருள் போளி தயார்.

8 comments:

  1. ஒரு பக்கம் மட்டும் சுட்டு எடுக்க வேண்டுமா...? - இது துணைவியாரின் சந்தேகம்...

    பல முறை பூரி சாப்பிட்டதால் எனக்கும் தகவல் வேண்டும்... ஹிஹி...

    நன்றி...

    ReplyDelete
  2. இரு புறமும் சுட்டு எடுக்க வேண்டும். ஆனால் முறுகலாக இல்லாமல் எடுக்க வேண்டும்.வருகைக்கு மிக்க நன்றி சார்..:)

    ReplyDelete
  3. பார்க்கும் போதே சுவையாக இருப்பது போன்ற உணர்வு தீபாவளி சிறப்பாங்க.

    ReplyDelete
  4. இல்லை சசி..இத்தனை நாளா இது பப்ளிஷ் பண்ணாம draftல இருந்தது.. இன்று பார்த்து பப்ளிஷ் பண்ணேன்..:) லேப்டாப் கையில கிடைக்கும் போது செய்றதுதான்..வருகைக்கு நன்றி சசி..

    ReplyDelete
  5. பிடித்திருக்கிறது ராதா. சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. செய்து பாருங்கள் இமா.. வருகைக்கு நன்றி:)

    ReplyDelete
  7. படத்தில் பார்க்கவும், செய்முறையினைப் படிக்கவுமே நாக்கில் ஜலம் ஊறுகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். VGK

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அண்ணா..:)

      Delete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)