வீட்ல திடீர் விருந்தாளிகள் வந்துட்டாங்கன்னா ஈசியா செய்யகூடிய ரெசிபி இந்த உக்காரை.தீபாவளி,வருடப்பிறப்பு,போன்ற விஷேச நாட்கள்லயும் அதிகமா இந்த இனிப்பை செய்யறாங்க.இன்னிக்கு இந்த உக்காரையை வீட்ல செய்தேன்.புரட்டாசியில் பெருமாளுக்கு உக்காரையை படையலாக படைக்கிறார்கள்.இதையே நெய் அதிகமாக ஊற்றி செய்தால் அக்கார வடிசல்னு சொல்லுவாங்க. :-)
- கடலைபருப்பு - ஒரு கப்
- சர்க்கரை - ஒரு கப்
- நெய் - ஒரு குழி கரண்டி
- முந்திரி - தேவையான அளவு
- உலர்திராட்சை - பத்து கிராம்
- தேங்காய் - சிறிது
செய்முறை:-
- கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் பருப்பு முழ்கும் அளவிற்கு சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவேண்டும்.
- தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
- வெந்த பருப்பை ஆற விட்டு மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
- பருப்பை மாவாக அரைத்து விட கூடாது.
- வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
- சர்க்கரை சூட்டில் உருகி கரைந்த உடன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
- சர்க்கரையும்,நெய்யும்,சேர்ந்து வந்தஉடன் மிக்சியில் உள்ள பருப்பை கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
- சிறிது நெய்யில் நறுக்கிய தேங்காய்,உலர்திராட்சை,முந்திரி, அனைத்தையும் வறுத்து கிளறிய மாவில் கொட்டி கிளறி இறக்கிவிட வேண்டும்.
- உக்காரை ரெடி..