ஸ்டஃப்ட் உருண்டை குழம்பு

Leave a Comment
தேவையான பொருட்கள்:-         
  • கடலை பருப்பு        - 2கப்        
  • காலிபிளவர்           - சிறிய பூ                                        
  • கார்ன்ப்ளார்           - 3 ஸ்பூன்
  • பனீர்               - 1/2 கப்
  • உப்பு               - சிறிது
  • வெங்காயம்          - 10
  • பூண்டு              - 8 இதழ்கள்
  • தக்காளி            - 2      
  • பெருஞ்சீரகம்        - 1ஸ்பூன்
  • இஞ்சி               - சிறு துண்டு
  • மிளகாய் பொடி       - 1 ஸ்பூன்
  • தேங்காய்         - 1/4 மூடி
  • கரம் மசாலா பொடி - 2ஸ்பூன்
  • எண்ணெய்            - 2 குழி கரண்டி
  • எண்ணெய்             - பொரிக்க தேவையான அளவு
  • கடுகு,உளுந்து    -சிறிது      
     செய்முறை:-

    •  ஒரு மணி நேரம் கடலை பருப்பை ஊற  வைக்க வேண்டும்.
    • காலிபிளவரை மிக பொடிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.
    • . நறுக்கிய காலிபிளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு நீரை நன்றாக வடிய விட வேண்டு   மிக்சியில் கடலை பருப்பை நீரை வடித்து விட்டு போட்டு உப்பு,பெருஞ்சிரகம்,பூண்டு,சேர்த்து கொர கொரப்பாகவும் இல்லாமல் வழுவழுப்பாகவும் இல்லாமல் மீடியமாக  அரைக்க வேண்டும். 
    • இதனுடன் காலிபிளவரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
    •   இந்த கலவையில் கார்ன்  .பிளாரை சேர்த்து பிசைய வேண்டும்.
    • பிசைந்த கலவையை உருண்டையாக உருட்டி நடுவில் ஒரு  குழி செய்து 
    . பனிரை அதில் வைத்து ஸ்டப் செய்ய வேண்டும்.
    •   இதே போல் கலவை முழுவதையும் செய்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
    • .,  மிக்சியில் தேங்காய்,பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி,அனைத்தையும் போட்டு அரைக்கவேண்டும்.    
    • வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு,உளுந்து போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி ,உடன் கரம்மசாலா சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் நன்றாக பிரட்டி விட்டு மிக்சியீல் அரைத்த விழுதை போட்டு சிறிது உப்புடன் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
    • நன்றாக கொதித்து வரும் பொழுது எண்ணெயில் பொறித்த உருண்டைகளை போட்டு கிளறி மல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.




    Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)

    0 comments:

    Post a Comment